Breaking

Sunday, April 9, 2017

சென்னையில் திடீர் பள்ளம் பஸ், கார் சிக்கியுள்ளதால் பரபரப்பு அண்ணா சாலை

சென்னையில் திடீர் பள்ளம் பஸ், கார் சிக்கியுள்ளதால் பரபரப்பு அண்ணா சாலை


சென்னையில் திடீர் பள்ளம் பஸ், கார் சிக்கியுள்ளதால் பரபரப்பு அண்ணா சாலை
சென்னையில் திடீர் பள்ளம் பஸ், கார் சிக்கியுள்ளதால் பரபரப்பு அண்ணா சாலை
சென்னை அண்ணா சாலையில் ஜெமினி மேம்பாலம் அருகே, அண்ணா சாலையில் திடீரென்று ஏற்பட்ட பள்ளத்தால், பஸ் மற்றும் கார் சிக்கியுள்ளது.

அந்த பஸ், அண்ணா சதுக்கத்திலிருந்து வடபழனி சென்ற (25G மார்கம்) சென்னை மாநகர பஸ் ஆகும். பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. 25 பேர் பயனித்த அந்த பேருந்தில் 10 பேர் காயமுற்றுள்ளனர். அவர்களை ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

அந்த இடத்திற்கு மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக இந்த பள்ளம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு வருகிறார்கள். மேலும், பள்ளத்தை மண் மற்றம் கான்கிரீட் கோண்டு மூடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போக்குவரத்தை மாற்று பாதையில் இயக்கி, கூட்டம் சேராமல் கட்டுப்படுத்தி வருகிறார்கள். இதன் காரணமாக அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Comment here